குருச்சேத்திரப்
போர்க் களத்தில் அருச்சுனனுக்கு ஸ்ரீகிருஷ்ணர் பகவத் கீதையை
எடுத்துரைத்தல்,
1830ம் ஆண்டு ஓவியம்
மகாபாரதத்தில் நடைபெறும் குருச்சேத்திரப்
போர் தொடங்கும் முன்
எதிரணியை ஒருமுறை பார்வையிட்ட அருச்சுனன் அங்கே அவன்
உறவினர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள் போன்றோர் இருப்பதால் போரிட
மறுத்தார். இதைக் கண்ட
அவன் தேரோட்டியான கிருஷ்ணர், தர்மத்திற்காகப் போரிடும் பொழுது
உறவுமுறைகள் குறுக்கிடக்கூடாது என்பது
குறித்து விளக்கினார். அந்த
விளக்கத்தில் தத்துவங்கள், யோகங்கள் போன்றவை பற்றியும் தெரிவித்தார். இந்த
உரையாடல் கருத்துக்களே பகவத்
கீதையாகும். இதில் கிருஷ்ணர் சொல்வதாக 620 ஸ்லோகங்களும், அர்ஜுனனின் சொல்வதாக 57, சஞ்சயன் சொல்வதாக 67, திருதராஷ்டிரன் சொல்வதாக ஒரு
ஸ்லோகம் என மொத்தமாக 700 ஸ்லோகங்களையும், 18 அத்தியாயங்களையும் கொண்டதாகும்.[1]
இந்நூலை பிரஸ்தான த்ரயம்
என்றும் சொல்வதுண்டு. இதற்கு
பிரம்ம சூத்திரம், உபநிஷத்துகள் ஆகியவற்றோடு பகவத்
கீதையும் இணைந்து மூன்று
அஸ்திவாரங்கள்
என்று பொருள்படி பிரஸ்தானத்திரயம்
என்று அழைக்கப்படுகிறது.[2]
ராஜாஜியின் கைவிளக்கு, பால கங்காதர திலகரின்
கர்ம யோகம், மகாத்மா காந்தியின் அநாஸக்தி யோகம் போன்றவை பகவத்
கீதை உரைகளாகும்.
“வருந்தப்பட வேண்டாததற்கு வருத்தப்படுவது அறிவாளிகளுடைய செயலல்ல. மூன்று
காலத்திலும் எந்தப் பொருள்
இல்லையோ அதற்கு ஒரு
காலத்திலும் இருப்பு என்பதில்லை. இருப்பது போல்
தோன்றினாலும் அது நிகழ்காலத் தோற்றம் மட்டும்தான். மூன்று
காலத்திலும் எந்தப் பொருள்
உள்ளதோ அதற்கு ஒரு
காலத்திலும் இல்லாமை என்பதில்லை. புலன்களுக்கு அகப்படாததை இல்லை
என்று சொல்லிவிட முடியாது. ஆத்மா என்ற ஒன்றுதான் அழியாத
நிரந்தரமான உட்பொருள். அதை
யாராலும் அழிக்க முடியாது. அழிவதாக நமக்கு
தெரிவதெல்லாம்
உடம்பு தான். “அர்ச்சுனா, எதிரிகளின் மீதுள்ள பாசத்தை விட்டுப் போர்
புரி. அவர்கள் உடம்பில் குடிகொண்டிருக்கும் ஆன்மா
யாரையும் கொல்லாது, அதை
யாராலும் கொல்லவும் முடியாது. அதனால்
நீ யாருக்காகவும் வருத்தப்பட வேண்டர்ம்” என்கிறார். இந்த
முதல் வாதத்தின் அடிப்படையில் தான்
முழு கீதையும் செயல்படுகிறது.
இது கர்ம யோகம் என்று பெயர்
கொண்ட புரட்சி மிகுந்த உபதேசம். எளிதில் தவறாகப் புரிந்து கொள்ளப்படக் கூடியது. ‘ஒவ்வொரு மனிதனும் செய்யவேண்டிய கடமைகள் பல.
அவைகளைச் செய்வதில் விருப்போ அல்லது
வெறுப்போ ஒரு பிரச்சினை ஆகக்கூடாது. கடமையைக் கடமைக்காகவே செய்ய
வேண்டும். கடமையைச் செய்வதற்குத் தான்
உனக்கு அதிகாரம். அவை
என்ன பயன் தருகிறதோ, தருமோ
என்ற பிரச்சினை உன்னை
எந்த விதத்திலும் பாதிக்கக் கூடாது.
பயனுக்காகவோ அல்லது பயனை
விரும்பியோ, வெறுத்தோ செயலில் ஈடுபடுவது உன்னை
கட்டுப்படுத்தும்.
இந்தப்போர் உன்னுடைய கடமைகளில் ஒன்று.
இதை ஆசையோ, நிராசையோ, கோபமோ
தாபமோ இல்லாமல், ஆனால்
அலட்சியமும் இல்லாமல், நன்றாகவே செய்யவேண்டும்’. ‘உனது
செயல்களை யெல்லாம் எனக்கு
அர்ப்பணித்து விட்டு என்னில் நிலைத்த மனதுடன், பயனில்
பற்றற்று, அகங்காரத்தை விட்டு,
மனக் கொதிப்பில்லாமல் போரிடு’
(3 – 30).
கீதை 2வது அத்தியாயம் 39 வது
சுலோகத்திலிருந்து
5வது அத்தியாயம் முடியும் வரை
இதை கர்ம யோகம் என்ற ஒரு
உயரிய யோக நூலாக
விவரிக்கப்படுகிறது.
பிரகிருதி
என்பது மனிதனின் கூடவே
பிறந்த சுபாவம். ‘அகங்காரத்தினால் நீ
செய்வதாக நினைத்துக்கொண்டு நான்
சொல்வதைக் கேளாமல் செயற்படுவாயானால், அழிந்து போவாய்’
(18–58). ‘அகங்காரத்தின்
மயக்கத்தினால்
நீ போரிட மாட்டேன் என்று
நினைப்பது வெற்றுத் தீர்மானம். அது
நடக்காது. உன் பிரகிருதி உன்னை
அப்படிச் செய்ய விடாது’
(18 – 59). ‘எந்தக் காரியத்தைச் செய்ய
மாட்டேன் என்று நீ
பின்வாங்குகிறயோ
அதையே செய்யும்படி உன்
பிரகிருதி (சுபாவம்) உன்னைக் கட்டாயப்படுத்தும்.’ (18-60). இது பிரகிருதியை ஆதாரமாகக் கொண்டு
தத்துவ ரீதியில் சொல்லப்பட்ட ஐந்தாவது வாதம்.
- பற்றுகளை அறு. அதற்காக புலனடக்கம் என்ற யோகசாதனையைச் செய்துகொண்டே இரு.
- பலனில் பற்றற்று சுயதருமத்தை ஒழுகு.
- ஈசனை மறக்காதே. அந்த இரண்டற்ற பரம்பொருளிடம் சுயநலமற்ற பக்தியைச் செலுத்து.
- அம்மெய்ப் பொருளையே புகலிடமாகக் கொள்.
- யாரையும் எதையும் வெறுக்காமலிருக்கும் சமநோக்கு அல்லது பிரும்ம உணர்வு என்னும் முடிவை நோக்கிச் செல்.
பொருள்: பழமையான உபாயங்களான கர்மயோகத்தாலும், பக்தி யோகத்தாலும் மற்றும் ஞான யோகத்தாலும் பரிசுத்தியடைந்த தம்
நெஞ்சில், (பகவத் தொண்டு
தவிர) வேறொன்றை விரும்பாது, மிகவும் வைராக்யமுடையவர்கள், (கர்மஜ்ஞானவைராக்யங்களாலே யுண்டான) பக்தியோகத்தாலே அடையும் பரப்ரஹ்மமாகிற நாராயணனே பகவத்கீதைக்கு அறிவாளிகள் அங்கீகரித்து எண்ணும் பொருளாவான்.
பகவத் கீதைக்குப் பலர்
உரை எழுதியுள்ளனர். ஆதி சங்கரர், இராமானுஜர், மத்வர் ஆகிய மூன்று
இந்து சமயப் பெரியோர்களும், நிம்பர்க்கர், வல்லபர்,
ஞானேசுவரர்
போன்றவர்களும்
எழுதிய பழைய உரைகளே
பல உரைகளுக்கு வழிகாட்டிகளாக இருக்கின்றன. இருபதாம் நூற்றாண்டில் சுவாமி சின்மயானந்தா, பக்திவேதாந்த
ஸ்வாமி, சர்வபள்ளி
ராதாகிருஷ்ணன், சுவாமி சிவானந்தர், சுவாமி அரவிந்தர், மகாத்மா காந்தி, வினோபா பாவே, அன்னி பெசண்ட் அம்மையார்,
சுவாமி சித்பவானந்தர் போன்றவர்களும் மேலும்
சிலரும் சிறந்த உரைகளை
எழுதியிருக்கின்றனர்.
உலகிலுள்ள பல மொழிகளில் பகவத்
கீதை மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது. ஆங்கிலத்தில் கீதையின் முதல்
மொழிபெயர்ப்பு
கிழக்கிந்தியக்
கம்பெனியாரால் செய்யப்பட்டது. அம்மொழிபெயர்ப்பு நூலுக்கு வாரன்
ஹேஸ்டிங்ஸ் (Warren
Hastings) எனும் ஆங்கில ஆட்சியாளர் முன்னுரை அளித்ததில் "இங்கிலாந்து ஒரு
காலத்தில் இந்தியாவை இழக்க நேரிட்டாலும் இந்தியாவில் தோன்றிய பகவத்கீதையின் கோட்பாடுகளை இங்கிலாந்து நடைமுறைக்குக் கொண்டுவருமானால் இங்கிலாந்து என்றென்றும் மேன்மையுற்று விளங்கும்’ என்று
குறிப்பிட்டிருந்தார்.[3]
- உத்தவ கீதை
- ஹம்ச கீதை
- அவதூத கீதை
- உத்தர கீதை
- பிக்ஷு கீதை
- அஷ்டாவக்ர கீதை
- ராம கீதை
- சுருதி கீதை
- குரு கீதை
- சிவகீதை
- ஆத்ம கீதை
இந்தியத் தொல்பொருள் ஆய்வாளர், அறிஞர்
முனைவர். சி.சி.
சர்க்கார் “, குருச்சேத்திரப்
போர் உண்மையான வரலாற்று நிகழ்ச்சி அல்ல”
என்று கூறுகிறார். அதற்கு
அவர் கீழ் கண்ட
காரணங்களை முன் வைக்கிறார்.
- வேத சாகித்தியத்தில் எங்குமே பாரதப் போர் பற்றிக் கூறப்படவில்லை.
- பவுராணிகர்களுக்குக் கூட மகாபாரதப் போர் எப்போது நடந்தது என்று தெரியவில்லை.
- கி.மு.4 ஆம் நூற்றாண்டிற்கு முன்னருள்ள எந்தவோர் இலக்கியத்திலும் மகாபாரதப் போர் பற்றிக் குறிப்பிடப் படவில்லை.
- மகாபாரதப் போர் நடந்த குருசேத்திரம் ஒர் போர்க்களமாக வேதங்களில் எங்கும் கூறப்படவில்லை.
தமிழ்நாட்டில்
பெரியார் தலைமையிலான திராவிட இயக்கத்தினர் பகவத்
கீதையை கடுமையாக எதிர்த்தனர். திராவிட கழகத்தின் தலைவர்
கி. வீரமணி கீதையின் மறுபக்கம் என்ற நூலை
எழுதியுள்ளார்.
அதில் பகவத் கீதை
வருணாசிரமத்தை
நிலைநிறுத்த மகாபாரதத்தில் பின்
சேர்க்கையாகச்
சேர்க்கப்பட்ட
நூலே என்று கூறப்பட்டுள்ளது.
- நானே நான்கு வர்ணங்களையும் படைத்தேன் (பகவத் கீதை 4:13)
- "நீ ஒரு சாதாரண செருப்புத் தைப்பவனாக இருந்தாலும், உனது மரணத்திற்கு பின் அடுத்த ஜென்மத்தில் நீ பெற விருப்பும் வாழ்வை உத்தேசித்து அதே செருப்பு தைக்கும் தொழிலைத்தான் செய்யவேண்டுமே தவிர, ஒரு வீரம் செறிந்த ராணுவ வீரனாகவோ, ஒரு சிறந்த கல்விமானகவோ வர விரும்பவே கூடாது. எவ்வளவு கீழான கேவலமானதாயினும் அந்த உன் சாதித் தொழிலிலிருந்து மாறாமல் நீ இருந்தாயானால், அடுத்த பிறவியில் உனக்கு விடிவு உண்டு" (ஆதாரம் நூல்: கீதை பற்றிய உண்மை, ஆசிரியர்:வீ.ஆர்.நார்லா, பக்கம்:169 ).(பகவத் கீதை 3:4)
- மக்கள் தங்கள் சமுதாய நிலை முடிவு செய்யும் கடமைகளைச் செய்ய வைப்பதற்காக உண்மையை அவர்களிடம் சொல்லக்கூடாது(பகவத் கீதை 3:26, 29)
- செல்வம் படைத்தவனாகவும், உயர் குலத்துதித்தவனாகவும் நான் இருக்கிறேன். எனக்குச் சம்மானவன் வேறொருவன் எவன் இருக்கிறான்? நான் யக்ஞம் செய்வேன். நான் தானம் செய்வேன். நான் களிப்பேன். (பகவத் கீதை 16:15)
- பகவத் கீதை கொலை செய்வதையும் நியாயப்படுத்துகிறது.
- காந்தியடிகளைக் கொலை செய்த குற்றத்திற்காக நாதுராம் கோட்சேயைக் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தியபோது, அவர் கீதை காட்டும் இந்து தர்மப்படி காந்தியைக் கொலை செய்தது நியாயமே என்று கூறினார்
- கீதையில் அர்ச்சுனன் கிருஷ்ணனைப் பார்த்து
உருசியாவின் சைபீரியாவில் உள்ள டோம்ஸ்க் என்ற
நகர நீதிமன்றத்தில் இஸ்கான் நிறுவனர் பக்திவேதாந்த சுவாமி
பிரபுபாதாவினால்
எழுதப்பட்ட ’பகவத் கீதா
அஸ் இட் ஈஸ்’
நூலின் உருசிய மொழிபெயர்ப்பு நூல்
"தீவிரவாத" நூலாகக் கருதப்பட்டு தடை
செய்யப்பட வேண்டும் என
எதிர்ப்பாளர்கள்
வழக்கு பதிந்தனர்[4][5] இந்த
மொழிபெயர்ப்பு
நூல் "சமூக வேற்றுமையை " வளர்ப்பதாக உருசியா எங்கும் தீவிரவாத நூல்
என்று தடை செய்ய
வேண்டும் என சூன்
மாதத்தில் இந்த வழக்கு
பதியப்பட்டது.
No comments:
Post a Comment